பதிவு செய்த நாள்
02 பிப்2014
01:53
ஓசூர்:ஓசூரில் இருந்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் காதல் ரோஜா பூக்களின் விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம்,ஓசூர் அடுத்த, அமுதகொண்டப்பள்ளியில், டிட்கோ உதவியுடன், 370 ஏக்கரில், ஆசியாவிலேயே, மிக பெரிய, ‘டான்ப்ளோரா’ ரோஜா மலர் பண்ணை செயல்படுகிறது.இங்கு விளையும் ரோஜா மலர், ஆரம்ப காலத்தில், ஆண்டு முழுவதும், அரேபிய நாடுகள், ஐரோப்பா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியானது.
குறிப்பாக, காதலர் தினத்தையொட்டி, டான்ப்ளோராவில் இருந்து, 6 கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதியாவது வழக்கம்.கடந்தாண்டு நிலவிய வறட்சியால், டான்ப்ளோராவில் வெறும், 40 ஏக்கருக்கு குறைவாக, ரோஜா சாகுபடி செய்யப்பட்டு, கடந்த காதலர் தினத்தன்று, 20 லட்சம் ரோஜா மலர் ஏற்றுமதி செய்யப்பட்டது.இந்நிலையில், நடப்பாண்டில், ஓசூரில் நிலவும் குளிர் சீசனால், ரோஜாவின் விளைச்சல் அமோகமாக உள்ளதால், வெளிநாடுகளுக்கு, காதலர் தின ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.இதனால், ரோஜாமலர் விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|