பதிவு செய்த நாள்
08 பிப்2014
12:00
சென்னை: ஊதிய உயர்வு பேச்சு தோல்வியடைந்ததால், இம்மாதம், 10 மற்றும் 11 ஆகிய, இரு நாட்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம்,'' என, இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு பொதுச் செயலர், கிருஷ்ணன் அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இம்மாதம், 10ம் தேதி, காலை, 6:00 மணியிலிருந்து, 12ம் தேதி, காலை, 6:00 மணி வரை, வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறோம். நாடு முழுவதும் உள்ள, 80 ஆயிரம் வங்கிக் கிளைகளில் பணியாற்றும், 10 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். இவர்களை தவிர, 18 ஆயிரம், கிராம வங்கிக் கிளைகளில் பணியாற்றும், 1 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கின்றனர்.இவ்வாறு, கிருஷ்ணன் கூறியுள்ளார்.
மூன்று நாள் மூடல் : வங்கி ஊழியர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தம், திங்கள், செவ்வாய் நாட்களில் நடக்கிறது. ஞாயிறு விடுமுறை தினம்; சனிக்கிழமை அரை நாள் பணி. எனவே, ஏ.டி.எம்., உட்பட, பண பரிவர்த்தனை நடவடிக்கைகள் அனைத்தும், மூன்றரை நாள் முடங்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|