பதிவு செய்த நாள்
17 பிப்2014
17:11
மும்பை : 2014-15ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் இன்று(பிப்ரவரி 17ம் தேதி) பார்லியில் தாக்கல் செய்யப்பட்டது. இன்றைய பட்ஜெட்டில் குறிப்பாக ஆட்டோமொபைல், மூலதன பொருட்கள் மற்றும் நுகர்வோர் அல்லாத துறைகளில் சுங்கவரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இதுதொடர்பான பங்குகள் விலை நல்ல ஏற்றம் கண்டதால் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் முடிந்தன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 97.24 புள்ளிகள் உயர்ந்து 20,464.06-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 24.95 புள்ளிகள் உயர்ந்து 6,073.30-ஆகவும் முடிந்தது.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் டாடா பவர், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாக்டர் ரெட்டி லேப், ஐசிஐசிஐ., உள்ளிட்ட 20 நிறுவன பங்குகள் விலை உயர்வுடன் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|