பதிவு செய்த நாள்
18 பிப்2014
12:22
தமிழகத்தில், 16 அன்னிய நிறுவனங்கள், 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம், முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், அடுத்த வாரம் நடக்கிறது. "தமிழகத்தில், தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல நிறுவனங்கள், தமிழகத்தில், தொழில் துவங்காமல், கர்நாடகா, குஜராத் மாநிலங்களில், முதலீடு செய்கின்றன' என, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இதை மறுக்கும் வகையில், தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த, 16 நிறுவனங்கள், தமிழகத்தில், 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளன. இதில், ஏழு நிறுவனங்கள், 350 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்ய உள்ளன. இந்த நிறுவனங்களுக்கு, அரசின் சார்பில், தடையில்லா மின்சாரம், நிலம் ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட உள்ளன.வரும், 24ம் தேதி, ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|