பதிவு செய்த நாள்
19 பிப்2014
17:19
மும்பை : தகவல் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவம் சார்ந்த பங்குகள் விலை ஏற்றம் பெற்றதால் இந்திய பங்குசந்தைகள் வாரத்தின் மூன்றாம் நாளில் ஏற்றத்துடன் முடிந்தன. கடந்த 3 நாட்களில் 441 புள்ளிகள் ஏற்றம் பெற்ற நிலையில் இன்று மேலும் 89 புள்ளிகள் அதிகரித்தன. இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 88.76 புள்ளிகள் உயர்ந்து 20,722.97-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 25.65 புள்ளிகள் உயர்ந்து 6,152.75-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 16 நிறுவன பங்குகள் விலை ஏற்றத்துடனும், 13 பங்குகள் விலை சரிந்தும், டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் விலை மாற்றமின்றியும் முடிந்தன. குறிப்பாக இன்றைய வர்த்தகத்தில் இன்போசிஸ், டி.சி.எஸ்., போன்ற தகவல் தொழில்நுட்ப பங்குகளும், சன்பார்மா, டாக்டர் ரெட்டி, ரேன்பாக்ஸி உள்ளிட்ட மருத்துவ துறை சார்ந்த பங்குகள் விலையும் நல்ல ஏற்றம் பெற்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|