பதிவு செய்த நாள்
22 பிப்2014
12:14
புதுடில்லி: 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2007 2012), நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ஆண்டுக்கு சராசரியாக, 8 சதவீதமாக இருந்தது என, மத்திய திட்ட அமைச்சர் ராஜீவ் சுக்லா, பார்லிமென்டில் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது: 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், 9 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்ட, இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சர்வதேச நாடுகளின் பொருளாதார சுணக்க நிலை, பணவீக்கம் அதிகமாக இருந்தது மற்றும் வறட்சியால், வேளாண் உற்பத்தி பின்னடைவு போன்ற காரணங்களால், 8 சதவீத வளர்ச்சி மட்டுமே எட்டப்பட்டு உள்ளது. மதிப்பீட்டிற்க்கான ஐந்தாண்டு திட்ட காலத்தில், வேளாண் துறையில், 4 சதவீத வளர்ச்சி காண, இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், 3.7 சதவீதம் மட்டுமே எட்டப்பட்டுள்ளது. சேவை துறை இலக்கில் (9 11 சதவீதம்), 9.7 சதவீதம் மட்டுமே வளர்ச்சி காண முடிந்துள்ளது.
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, அதிக முதலீட்டிலான அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை, துரித கதியில் செயல்படுத்த, முக்கிய அமைச்சரவை குழு முனைந்துள்ளது. இவ்வாறு, ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|