"இ - போஸ்டல் ஆர்டர்' அறிமுகம்"இ - போஸ்டல் ஆர்டர்' அறிமுகம் ... 11வது ஐந்தாண்டு கால திட்டத்தில் 8 சதவீத பொருளாதார வளர்ச்சி 11வது ஐந்தாண்டு கால திட்டத்தில் 8 சதவீத பொருளாதார வளர்ச்சி ...
"ஆதார்' அட்டை கணக்கு இல்லாதவர்களுக்கும் சிலிண்டர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2014
11:52

புதுடில்லி: "ஆதார்' அடையாள அட்டையுடன் இணைந்த, வங்கிக் கணக்கு இல்லாதவர்களும், மானிய விலை சமையல் காஸ் சிலிண்டர்களை பெறலாம்' என, மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. மானிய விலையில் வழங்கப்படும், சமையல் காஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கையை, ஒன்பதிலிருந்து, 12 ஆக மத்திய அரசு, சமீபத்தில் உயர்த்தியது. மற்றொரு புறம், மானிய விலை சிலிண்டர்களை பெறுவதற்கு, ஆதார் அட்டையுடன் இணைந்த வங்கிக் கணக்கு அவசியம் என, அறிவிக்கப்பட்டிருந்தது.

உறுதிபடுத்த வேண்டும்: இது தொடர்பாக, முன்னுக்குப்பின் முரணான கருத்துக்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த குழப்பத்திற்கு விடை காண, சுப்ரீம் கோர்ட் வரை, இந்த விவகாரம் எடுத்து செல்லப்பட்டது. கடைசியாக, சுப்ரீம் கோர்ட், "அரசின் மானிய பலன்களைப் பெற, ஆதார் அட்டை தேவையில்லை என்பதை, மத்திய அரசு உறுதிபடுத்த வேண்டும்' என, அறிவித்தது. இருப்பினும், இந்த பிரச்னை குறித்து, விளக்கம் அளிக்கும்படி, லோக்சபாவில் பிரச்னை எழுப்பப்பட்டது.

இது குறித்து, மத்திய, பெட்ரோலிய அமைச்சர், வீரப்ப மொய்லி நேற்று கூறியதாவது:


கணக்கு அவசியமில்லை :
மானிய விலை சமையல் காஸ் சிலிண்டர்களை பெறுவதற்கு, ஆதார் அட்டையுடனான கணக்கு அவசியமில்லை. இந்த கணக்கு இல்லாமலேயே, வழக்கம் போல், மானிய விலை சிலிண்டர்களை பெறலாம். இது குறித்து, விளக்கம் அளித்து அறிவிப்பு, ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும். மானிய விலை சிலிண்டர்கள் விலையை அரசு உயர்த்தாது. அதே போல், ஒரே வீட்டில், இரண்டு குடும்பங்கள் இருந்தாலும், இரண்டு காஸ் இணைப்புகள் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும், புதிதாக, ஒரு கோடி காஸ் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. இதில் பெரும்பாலும், கிராமப்பகுதிகளில் தான் அதிகமாக வழங்கப்படுகின்றன.இவ்வாறு, மொய்லி கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)