பதிவு செய்த நாள்
01 மார்2014
14:22
அஞ்சல் துறையை நவீனமயமாக்கும் முயற்சியாக, 2016க்குள் நாடு முழுவதும், உள்ள தலைமை அஞ்சலகங்களில், "கோர் பேங்கிங்' வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதுவரை, 51 தலைமை அஞ்சலகங்களில், இவ்வசதி செய்யப்பட்டுள்ளது.
கணக்கு எண்ணை... : "கோர் பேங்கிங்' வசதி என்பது, தற்போது வங்கி களில், நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. ஒரு வங்கியின் அனைத்து கிளைகளையும், கணினி மூலம், இணைப்பதே, "கோர் பேங்கிங்' வசதி எனப்படுகிறது. இதன் மூலம், குறிப்பிட்ட வங்கியின் எந்த கிளையிலும், வாடிக்கை யாளர்கள், தங்கள் கணக்கு எண்ணை பயன்படுத்தி, சேவைகளை பெற முடியும்.
"எங்கேயும், எப்போதும்' : இதேபோல், அஞ்சல் துறையில், "கோர் பேங்கிங்' வசதியை ஏற்படுத்த, "எங்கேயும், எப்போதும்' என்ற பெயரில், மத்திய அரசு, ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்காக, 700 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக, சென்னை, தி.நகர் அஞ்சலகத்தில், "கோர் பேங்கிங்' வசதி, கடந்த, டிசம்பர், 23ம் தேதி ஏற்படுத்தப்பட்டது.
சி.பி.எஸ்., திட்டத்தின்... : சென்னை, கிரீம்ஸ் சாலை, கல்லூரி சாலை, தி.நகர் தலைமை அஞ்சலகங்களில், உள்ள, வாடிக்கையாளர்களின் கணக்குகள், சி.பிஎஸ்., திட்டத்தின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டன.
64 லட்சம் பேரின்... : இதற்கான மென்பொருளை, பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் வடிவமைத்து கொடுத்து உள்ளது. இதுவரை நாடு முழுவதும், 51 தலைமை அஞ்சலகங்கள் மற்றும், 11 துணை அஞ்சலகங்களில், சி.பி.எஸ்., வசதி செய்யப்பட்டுள்ளது; 64 லட்சம் பேரின் சேமிப்பு கணக்கு விவரங்கள் ஒன்றிணைக்கப் பட்டுள்ளன.
நாடு முழுவதும்...: வரும், மார்ச், 31ம் தேதிக்குள், மேலும், 700 அஞ்சலகங்களில், "கோர் பேங்கிங்' வசதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் உள்ள, 28,840 தலைமை அஞ்சலகங்களிலும், 2016க்குள், இவ்வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|