பதிவு செய்த நாள்
12 மார்2014
16:01
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு இன்னும் ஓரிரு மாதத்தில் ரூ.59-ஐ எட்டும் என பார்க்லேஸ் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அடுத்தமாதம் லோக்சபா தேர்தல் ஆரம்பமாக இருக்கிறது. இந்த தேர்தலில் ஆட்சி மாற்றம் இருக்கும் என்று எல்லோராலும் பரவலாக பேசப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து கொண்டே வந்தது. அதிலும் குறிப்பாக இருதினங்களுக்கு முன்னர் ரூபாயின் மதிப்பு 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூ.60.80-ஆக உயர்ந்தது.
இந்நிலையில் இதுகுறித்துப்பற்றி இங்கிலாந்தை சேர்ந்த பார்க்லேஸ் கூறியுள்ளதாவது, நடப்பாண்டின் மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 4.2 பில்லியன் டாலராக குறைந்தது. மேலும் அந்நிய முதலீடுகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ரூபாயின் மதிப்பும் உயர்ந்து கொண்டே வருகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் ரூபாயின் மதிப்பு மேலும் உயரக்கூடும். ரூபாயின் மதிப்பு ரூ.59 முதல் 60 வரை எட்டும். நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்தது, அந்நிய முதலீடு அதிகரித்தது மற்றும் விரைவில் நடைபெற இருக்கும் லோக்சபா தேர்தலும், அதில் ஆட்சி மாற்றம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பாலும் ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருவதாக கூறியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|