பதிவு செய்த நாள்
15 மார்2014
14:47
ஆமதாபாத் : இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் நிறுவனம் புதிதாக குஜராத் மாநிலம், முந்த்ராவில், 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. அடானி குழுமத்துக்கு சொந்தமான முந்த்ரா துறைமுகப் பகுதியில் உள்ள நிலத்தை ஐ.ஓ.சி.க்கு அளிக்க ஆர்வம் தெரிவித்துள்ளதையடுத்து புதிய ஆலை அங்கு அமைக்கப்படுகிறது. தற்போது ஐ.ஓ.சி.க்கு சொந்தமாக 7 எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளது. இதில் மொத்த உற்பத்தி திறன் 5.42 கோடி டன்னும், இதன் துணை நிறுவனங்களில் 1.15 கோடி டன்னும் எண்ணெய் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இந்நிலையில் தற்போது அமைய இருக்கும் புதிய ஆலை மூலம் ஐ.ஓ.சி.யின் மொத்த உற்பத்தி திறன் 10 கோடி டன்னாக அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|