பதிவு செய்த நாள்
27 மார்2014
16:54
மும்பை : இந்திய பங்குசந்தைகள், தினம் தினம் ஒரு புதிய உச்சநிலையை தொட்டு வருகின்றன. இன்று(மார்ச் 27ம் தேதி) சென்செக்ஸ் 22,307 புள்ளிகளையும், நிப்டி 6,673.95 புள்ளிகளையும் தொட்டு சாதனை படைத்தன. உலகளவில் பங்குசந்தைகளில் காணப்படும் எழுச்சி காரணமாகவும், அந்நிய முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் இந்திய பங்குசந்தைகளில் ஏற்றம் தொடர்வதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 119.07 புள்ளிகள் உயர்ந்து 22,214.37-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 40.35 புள்ளிகள் உயர்ந்து 6,641.75-ஆகவும் முடிந்தன. இன்றைய வர்த்தகநேரத்தில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 22,307 புள்ளிகள் வரையும், நிப்டி 6,673.95 புள்ளிகள் வரையும் சென்றன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 20 நிறுவன பங்குகள் விலை உயர்ந்து முடிந்தன. குறிப்பாக எஸ்.பி.ஐ., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பார்தி ஏர்டெல் நிறுவன பங்குகள் விலை அதிக லாபம் பெற்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|