வர்த்தக சிலிண்டர் விலை குறைப்புவர்த்தக சிலிண்டர் விலை குறைப்பு ... ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.60.16 ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.60.16 ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
பருப்பு வகைகள் விலை திடீர் உயர்வு: பதுக்கல் காரணமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2014
15:17

சென்னை: தமிழகத்தில் பருப்பு வகைகளின் விலை திடீரென உயர்ந்துள்ளது. பாசிப்பருப்பு ஒரு கிலோ, 100 ரூபாயைத் தாண்டிவிட்டது. தமிழத்தில், கடந்த வாரத்தில், 9,500 ரூபாய்க்கு கிடைத்த, 100 கிலோ கொண்ட பாசிப்பருப்பு மூட்டை, 500 ரூபாய் உயர்ந்து, 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறது. 7,000 ரூபாய்க்கு விற்ற ஒரு மூட்டை துவரம்பருப்பு (100 கிலோ), 7,300 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதுபோன்று, 7,200 ரூபாய்க்கு விற்ற ஒரு மூட்டை உளுந்தம்பருப்பு, 7,400 ரூபாயாகவும், பர்மா உளுந்து, 6,200 ரூபாயிலிருந்து, 6,400 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. சில்லரை விலையில், 96 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ பாசிப்பருப்பு, 100 - 102 ரூபாய்; 70 ரூபாய்க்கு கிடைத்த துவரம்பருப்பு, 75 ரூபாய்; 60 ரூபாய்க்கு கிடைத்த, இரண்டாம் ரக துவரம்பருப்பு, 65 ரூபாய்; 74 ரூபாயக்கு விற்ற ஒரு கிலோ உளுந்தம் பருப்பு, 76 ரூபாய்; 64 ரூபாய்க்கு கிடைத்த பர்மா உளுந்து, 66 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து, வணிகர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: நாட்டின் பருப்பு தேவையில், 70 சதவீதத்தை இறக்குமதி செய்கிறோம். பர்மாவில், தண்ணீர் திருவிழா நடக்கிறது. இதனால் அங்கிருந்து இறக்குமதி சற்று குறைந்துள்ளது. ஒரு மாதத்திற்கு முன், அறுவடை காலத்தில், உள்ளூர் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பாசிப்பருப்பு ஒரு கிலோ, 100 ரூபாயையும் தாண்டிவிட்டது. விலை குறைய, ஒரு மாதம் வரை ஆகலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
தேர்தல் நேரத்தில், பெரிய அளவில் அதிகாரிகளின் நெருக்கடி இருக்காது என்பதால், பெரிய நிறுவனங்கள் பருப்பு வகைகளை வாங்கி பதுக்கி வைத்துள்ளதும் விலையேற்றத்துக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)