பதிவு செய்த நாள்
25 ஏப்2014
00:24
புதுடில்லி:கடந்த 2013 – 14ம் நிதியாண்டில், மத்திய அரசின் நேரடி வரி வசூல், மறுமதிப்பீட்டு இலக்கை விட, 5,000 கோடி ரூபாய் கூடுதலாக கிடைத்துள்ளது.
இது குறித்து, மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் ஆர்.கே. திவாரி கூறியதாவது: கடந்த நிதியாண்டில், நேரடி வரிகள் வாயிலாக, முதலில், 6.68 லட்சம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.ஆனால், பொருளாதார மந்த நிலையால், நேரடி வரி வசூல் இலக்கு எட்டப்படாது என்ற காரணத்தால், இந்த வரி வசூல் இலக்கு, 6.36 லட்சம் கோடி ரூபாயாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது, நேரடி வரி வசூல் குறித்த இறுதி புள்ளிவிவரத்தின்படி, மறுமதிப்பீட்டு இலக்கான, 6.36 லட்சம் கோடி ரூபாயை விட கூடுதலாக, 5,000 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.அதேசமயம், மறைமுக வரி வசூல், மறுமதிப்பீட்டு இலக்கை விட, 17 ஆயிரம் கோடி ரூபாய் குறையும்என, மத்திய உற்பத்தி மற்றும் சுங்கவரி வாரியம் தெரிவித்துள்ளது.மறைமுக வரி வசூல் வாயிலாக, 5.20 லட்சம் கோடி ரூபாய் திரட்டும் வகையில், மறுமதிப்பீட்டு இலக்கு குறைக்கப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|