பதிவு செய்த நாள்
26 ஏப்2014
01:37
புதுடில்லி:அமெரிக்காவுடனான அறிவுசார் சொத்துரிமை பிரச்னையால், நடப்பு நிதியாண்டிற்கான, இந்திய மருந்து துறையின் ஏற்றுமதி இலக்கு எட்ட வாய்ப்பில்லை என, மத்திய அரசின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.கடந்த 2013-14ம் நிதியாண்டில், மருந்து துறையின் ஏற்றுமதி வளர்ச்சி, 1.2 சதவீதம் மட்டும் அதிகரித்து, 1,484 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச வளர்ச்சியாகும்.நடப்பு 2014-15ம் நிதியாண்டில், 2,500 கோடி டாலர் மதிப்பிற்கு மருந்து பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்திய மருந்து நிறுவனங்களுக்கும், அமெரிக்க மருந்து நிறுவனங்களுக்கும் இடையே, அறிவுசார் சொத்துரிமை தொடர்பான பிரச்னைகள் உள்ளதால், நடப்பாண்டில், நாட்டின் மருந்து ஏற்றுமதி இலக்கு எட்டப்படாது என, தெரியவந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|