பதிவு செய்த நாள்
26 ஏப்2014
15:42
மும்பை : நாட்டின் 3வது பெரிய தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கி, நடப்பாண்டுக்கான தனது காலாண்டு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதில் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை இவ்வங்கியின் நிகரலாபம் 18 சதவீதம் உயர்ந்து ரூ.1,842 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு இதேகாலக்கட்டத்தில் இது ரூ.1,555 கோடியாக இருந்தது. இதேப்போல் இவ்வங்கியன் மொத்த வருவாயும் 9,054.72 கோடியிலிருந்து (கடந்தாண்டு) ரூ.10,178.63 கோடியாக உயர்ந்துள்ளது. வட்டி மூலம் கிடைத்த வருவாய் 19 சதவீதம் உயர்ந்து ரூ.3,166 கோடியாக இருப்பதாக ஆக்சிஸ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் ஒட்டுமொத்தமாக 2013-14-ம் ஆண்டுக்கான நிகரலாபம் 20.05 சதவீதம் உயர்ந்து ரூ.6,217.67 கோடியாக அதிகரித்துள்ளதாகவும், இது கடந்தாண்டு ரூ.5,179.43 கோடியாக இருந்ததாகவும், ஆண்டின் மொத்த வருவாயும் ரூ.33,733.68 கோடியிலிருந்து ரூ.38,046.38 கோடியாக அதிகரித்து இருப்பதாகவும் ஆக்சிஸ் வங்கி தனது நிதிநிலை அறிக்கையில் கூறியுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|