பதிவு செய்த நாள்
28 ஏப்2014
17:29
மும்பை : வாரத்தின் முதல்நாளில் இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன. ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குசந்தைகளில் காணப்படும் சுணக்கம் காரணமாகவும், முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் இன்று(ஏப்ரல் 28ம் தேதி) சரிவுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவின்போது மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 56.46 புள்ளிகள் சரிந்து 22,631.61-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 21.50 புள்ளிகள் சரிந்து 6,761.25-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 22 நிறுவன பங்குகள் விலை சரிந்தும், 8 நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும் முடிந்தன. குறிப்பாக இன்றைய வர்த்தககத்தில் பஜாஜ் ஆட்டோ, கெயில், ஹீரோ மோட்டோ கார்ப், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட ஆட்டோமொபைல் பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|