வர்த்தகம் » பொது
பருத்தி ஏற்றுமதி குறைய வாய்ப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
29 ஏப்2014
01:53
நடப்பு பருவத்தில் (அக்.,-செப்.,), நாட்டின் பருத்தி ஏற்றுமதி, குறைய வாய்ப்புள்ளது என, தெரியவந்துள்ளது. நடப்பு பருவத்தின், அக்டோபர் முதல் மார்ச் வரையிலான ஆறு மாத காலத்தில், நாட்டின் பருத்தி ஏற்றுமதி, 94 லட்சம் பொதிகளாக (ஒரு பொதி-170 கிலோ) சற்று உயர்ந்துள்ளது.இது, இந்திய பருத்தி ஆலோசனை கழகத்தின் மதிப்பீட்டு அளவான, 90 லட்சம் பொதிகளை விட, அதிகமாகும்.பயன்பாடு:நடப்பு பருவத்தில், நாட்டின் பருத்தி உற்பத்தி, 3.75 கோடி பொதிகளாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இது, கடந்த பருவத்தை விட சற்று அதிகமாகும்.உள்நாட்டில், பருத்திக்கான தேவை, கடந்த ஆண்டை விட, 6 சதவீதம் அதிகரித்து, 2.90 கோடி பொதிகளாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், உலகளவில் பருத்தியை அதிகளவில் இறக்குமதி செய்து கொள்ளும் சீனாவில், இதன் பயன்பாடு குறைந்துள்ளது.
மேலும், சீனாவிடம் பருத்தி அதிகளவில் கையிருப்பு உள்ளது. இதையடுத்து, நடப்பு பருவத்தின், கடைசி ஆறு மாத காலத்தில், நாட்டின் பருத்தி ஏற்றுமதியில், 10 லட்சம் பொதிகள் அளவிற்கு குறைய வாய்ப்புள்ளது என, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.உலகின் மொத்த கையிருப்பில், சீனாவின் பங்களிப்பு, 60 சதவீதமாக உள்ளது. சீனாவில், பருத்திக்கான தேவை ஆண்டுக்கு, 77 லட்சம் டன் என்ற அளவில் உள்ள நிலையில், அந்நாடு, 1.26 கோடி டன் பருத்தியை கையிருப்பு வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.சுங்க வரி:தேவையை விட, கையிருப்பு அதிகமாக உள்ளதால், சீனா பருத்தி இறக்குமதியை தவிர்த்து வருகிறது.மேலும், நடப்பாண்டில், சீனா பருத்தி இறக்குமதியை குறைக்கும் வகையில், சுங்க வரியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.சீனாவில் பருத்திக்கான தேவை குறைந்துள்ளதையடுத்து, சர்வதேச அளவில், பருத்தியின் விலை குறைந்து வருகிறது.
இந்நிலையில், நடப்பாண்டில், உலகளவில் பருவ நிலை மாறுபாட்டால் மழை அளவு குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது, ஒட்டு மொத்த அளவில் வேளாண் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும்.விலை உயரும்அவ்வாறு, பாதிப்பு ஏற்படும் நிலையில், உலகளவில் பருத்தியின் விலை உயர வாய்ப்புள்ளது. இருப்பினும் தற்போதைய நிலையில், உலகளவில், பருத்திக்கான தேவை குறைவாகவே உள்ளது.பொதுவாக ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில், பருத்தியின் விலை குறைந்து காணப்பட்டாலும், பருவத்தின் கடைசி காலாண்டில், பருத்தியின் விலை உயர்வது என்பது தவிர்க்க முடியாததாக உள்ளது என, வர்த்தகர்கள் குறிப்பிட்டனர்.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 29,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 29,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 29,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 29,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!