பார்த்தி ஏர்டெல் நிகரலாபம் ரூ.2,773 கோடிபார்த்தி ஏர்டெல் நிகரலாபம் ரூ.2,773 கோடி ... பொருளாதாரத்தில் இந்தியா முன்னேற்றம் : உலக வங்கி தகவல் பொருளாதாரத்தில் இந்தியா முன்னேற்றம் : உலக வங்கி தகவல் ...
‘இந்திய மாம்பழ இறக்குமதிக்குஐரோப்பா தடை விதித்தது நியாயமல்ல’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஏப்
2014
23:49

லண்டன்:‘‘ஐரோப்­பிய கூட்­ட­மைப்பு, பிரச்னை­களை அரை­கு­றை­யாக புரிந்து கொண்டு, தவ­றான வழி­காட்டு­தலின் பேரில், இந்­திய மாம்­ப­ழங்­களின் இறக்­கு­ம­திக்கு தடை விதித்­துள்­ளது’’ என, பிர­சல்சை சேர்ந்த ஐரோப்­பிய இந்­திய வர்த்­தக கூட்­ட­மைப்பு (இ.ஐ.சி.சி.,)காட்­ட­மாக தெரி­வித்­துள்­ளது.
பூச்­சிக்­கொல்லி:இந்­தி­யாவின் அல்­போன்சா மாம்­ப­ழங்கள் மற்றும் சில காய்­க­றி­களில், நிர்­ண­யிக்­கப்­பட்ட அள­விற்கும் அதி­க­மாக, பூச்­சிக்­கொல்லி மருந்து காணப்­ப­டு­வதால், அவற்றின் இறக்கு­ம­திக்கு, இன்று முதல் தடை விதிக்­கப்­ப­டு­வ­தாக, ஐரோப்­பிய கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது.
ஐரோப்­பிய கூட்­ட­மைப்பின் இந்த நட­வ­டிக்­கைக்கு, இ.ஐ.சி.சி.,கடும் கண்­டனம் தெரி­வித்­து உள்ளது. இது தொடர்­பாக, இந்த அமைப்பின் தலைமை செயலர் சுனில் பிரசாத் வெளி­யிட்­டுள்ள அறிக்கை விவரம் வரு­மாறு:ஐரோப்­பிய நாடு­களின் அரசு உய­ர­தி­கா­ரிகள் இந்­திய மாம்­ப­ழங்­க­ளுக்கு தடை விதிக்கும் முடிவை எடுத்­துள்­ளனர்.இது, இந்­தி­யா­வுடன் தாராள வர்த்தக ஒப்­பந்தம் செய்து கொள்­வ­தற்­காக, 28 நாடு­களைக் கொண்ட ஐரோப்பியகூட்­ட­மைப்பு நடத்தி வரும், பேச்­சு­வார்த்­தையை பாதிக்கும்.
ஆனால், தாராள வர்த்­தக ஒப்­பந்தம் தொடர்­பாக, இந்­தி­யா­வுடன் பேரம் பேச, இந்த தடை உத்­த­ரவு உதவும் என, ஐரோப்­பிய கூட்­ட­மைப்பு கரு­து­கி­றது. அது தவறு. இது, ஐரோப்­பிய நாடுகள் குறித்து,இந்­தி­யாவில் அமைய உள்ள,புதிய அரசின் நிலைப்­பாட்டை கடு­மை­யாக்­கவே வழி­வ­குக்கும்.ஐரோப்­பிய நாடுகள், பலநுாற்­றாண்­டு­க­ளாக, இந்­திய மாம்­பழங்­க­ளையும் காய்­க­றி­க­ளையும் இறக்கு­மதி செய்து வரு­கின்­றன. இவற்­றுக்கு தடை விதித்­தி­ருப்­பது, ஐரோப்­பிய கூட்­ட­மைப்பின் பக்கு­வ­மற்ற, மோச­மான கொள்கை முடிவு­களை மீண்டும் எடுத்துக் காட்­டு­வ­தாக உள்­ளது.
மறு­ப­ரி­சீ­லனை:இந்­தி­யாவை விட, ஆப்­ரிக்கா மற்றும் ஆசி­யாவை சேர்ந்த சில நாடு­களில் இருந்து இறக்­கு­ம­தி­யாகும் பழங்கள் மற்றும் காய்­க­றி­க­ளின் தரம் மற்றும் ‘பேக்­கிங்’ மோச­மாக உள்­ளன. அவற்றை தவிர்த்து விட்டு, இந்­தி­யாவை மட்டும் குறி­வைத்து எடுக்­கப்­பட்ட இந்த நட­வ­டிக்கை, கண்­ணியக் குறை­வான, நியா­ய­மற்ற அணு­கு­முறை­யாகும்.ஐரோப்­பிய கூட்­ட­மைப்பு, இந்திய மாம்­ப­ழங்கள் மற்றும் காய்­க­றி­களின் இறக்­கு­ம­திக்கு விதிக்­கப்­பட்ட தடையை மறு­ப­ரி­சீ­லனை செய்ய வேண்டும். இவ்­வாறு அந்த அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)