பதிவு செய்த நாள்
03 மே2014
00:40
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், தொடர்ந்து ஐந்தாவது தினமாக நேற்றும் சுணக்கமாக இருந்தது.எல் அண்டு டி உள்ளிட்ட, பல முன்னணி நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் சந்தை மதிப்பீட்டிற்கு மாறாக அமைந்ததால், பல முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி, பங்குகளை விற்பனை செய்தனர். இதையடுத்து, பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது.
அமெரிக்க மத்திய வங்கி, தொடர்ந்து நான்காவது முறையாக, சந்தையிலிருந்து கடன்பத்திரங்கள் வாங்கும் திட்டத்தில் மேலும், 1,000 கோடி டாலர் குறைத்தது. இதன் எதிரொலியாக, ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.நேற்றைய வியாபாரத்தில், பொறியியல், உலோகம், மோட்டார் வாகனம், நுகர்பொருட்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.அதேசமயம், தகவல் தொழில்நுட்பம், மருந்து ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 13.91 புள்ளிகள் சரிவு அடைந்து, 22,403.89 புள்ளிகளில் நிலைபெற்றது.வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 22,575.62 புள்ளி கள் வரையிலும், குறைந்தபட்சமாக, 22,386.95 புள்ளிகள் வரையிலும் சென்றது.‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், எல் அண்டு டி, சேசா ஸ்டெர்லைட், மாருதி சுசூகி உள்ளிட்ட, 16 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், டாட்டா பவர், இன்போசிஸ், கோல் இந்தியா உள்ளிட்ட, 14 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின்குறியீட்டு எண், ‘நிப்டி’, 1.60 புள்ளி கள் குறைந்து, 6,694.80 புள்ளிகளில் நிலைகொண்டது.வர்த்தகத்தின் இடையே அதிக பட்சமாக, 6,737.65 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,689.50 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|