பதிவு செய்த நாள்
13 மே2014
10:35
மும்பை : தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில், பா.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று தகவல்கள் வெளியாகி இருப்பதாலும், அந்நிய முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், கடந்த இருதினங்களாக பங்குசந்தைகளில் அதிரடி உயர்வு தொடர்கின்றன. அதிலும் குறிப்பாக நேற்று நிப்டி முதன்முறையாக 7000 புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்த நிலையில், இந்த சாதனை இன்றும்(மே 13ம் தேதி) தொடர்கிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்திலேயே சென்செக்ஸூம், நிப்டியும் புதிய உச்சத்தை தொட்டன.
வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15 மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 370.91 புள்ளிகள் உயர்ந்து 23,921.91-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 101.95 புள்ளிகள் உயர்ந்து 7,116.20-ஆகவும் இருந்தன.
இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து ஆசியாவின் இதர பங்குசந்தைகளான ஹாங்காங்கின் ஹேங்சேங் 0.78 சதவீதமும், ஜப்பானின் நிக்கி 1.79 சதவீதமும் உயர்ந்து இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|