பதிவு செய்த நாள்
16 மே2014
00:31
புதுடில்லி:நடப்பு 2014–15ம் நிதியாண்டில், அனல் மின் உற்பத்தி திட்டங்களுக்கான நிலக்கரி தேவை, 5.67 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மொத்த நிலக்கரிக்கான தேவையில், உள்நாட்டின் பங்களிப்பு, 5.27 கோடி டன்னாகவும், இறக்குமதி பங்களிப்பு, 40 லட்சம் டன்னாகவும் இருக்கும் என, மத்திய மின்சார ஆணையம் (சி.இ.ஏ.,) தெரிவித்துள்ளது.
எனினும், உள்நாட்டில், நிலக்கரி உற்பத்தி, 47.30 கோடி டன் அளவிற்கே இருக்கும் எனவும், 5.40 கோடி டன் அளவிற்கு பற்றாக்குறை ஏற்படும் எனவும், இத்துறை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.கடந்த நிதியாண்டில், உள்நாட்டில் நிலக்கரி பயன்பாடு, 49.83 கோடி டன்னாக இருந்தது. இது, இலக்கு அளவான, 52.20 கோடி டன்னை விட குறைவாகும் என, சி.இ.ஏ., தெரிவித்துள்ளது.மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், 1.02 லட்சம் கோடி யூனிட் மின்சாரம் உற்பத்திக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதில், அனல் மின் திட்டங்களின் பங்களிப்பு மட்டும், 85,900 கோடி யூனிட் அளவிற்கு இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.கடந்த நிதியாண்டில், அனல் மின் திட்டங்களிலிருந்து, 79,200 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|