பதிவு செய்த நாள்
19 மே2014
00:12
புதுடில்லி:மத்திய அரசு, இறக்குமதி செய்யப்படும், 10 கிராம் தங்கத்தின் மதிப்பை, 424 டாலராக உயர்த்தியுள்ளது. இது, இதற்கு முன், 422 டாலராக இருந்தது.இதே போன்று, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ வெள்ளியின் மதிப்பையும், 632 டாலரிலிருந்து, 650 டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு, 15 நாட்களுக்கு ஒரு முறை, சர்வதேச விலை நிலவரத்திற்கு ஏற்ப, இறக்குமதி செய்யப்படும் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் மதிப்பை மாற்றி அமைத்து வருகிறது.மத்திய அரசு நிர்ணயிக்கும் மதிப்பின் அடிப்படையில்தான், இறக்குமதியாகும் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் மீது சுங்க வரி விதிக்கப்படுகிறது. மத்திய அரசின் கட்டுப்பாடுகளால், சென்ற 2013–14ம் நிதியாண்டில், தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி, 40 சதவீதம் சரிவடைந்து, 3.35 லட்சம் கோடியிலிருந்து, 2 லட்சம் கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|