வர்த்தகம் » பொது
கடன் பத்திரங்களை வாங்கி குவிக்கும்வெளிநாட்டு நிதி நிறுவனங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 மே2014
04:17
அன்னிய நிதி நிறுவனங்கள், நடப்பு மே 15ம் தேதி வரையிலான இரு வாரங்களில், 6,130 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, கடன் பத்திரங் களில் முதலீடு செய்துள்ளன.நிலையான ஆட்சி:முந்தைய ஏப்ரல் மாதத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், 8,742 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்பத்திரங்களை விற்பனை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, ஐ.டீ.பீ.ஐ வங்கியின் செயல் இயக்குனர் மற்றும் தலைமை அதிகாரி (கருவூலம்), என்.எஸ். வெங்கடேஷ் கூறியதாவது:மத்தியில் நிலையான ஆட்சி அமையும் என்ற எதிர்பார்ப்பில், மே துவக்கத்தில் இருந்து, கடன் பத்திரங்களில் முதலீடு அதிகரித்து வந்தது.
தற்போது ஸ்திரமான அரசு அமைந்து, சீர்திருத்த திட்டங்கள் ஊக்குவிக்கப்படும் என்பதால், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு, பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் மேலும் உயரும்.குறைந்தபட்சம் ஓராண்டு முதிர்வு காலத்தை கொண்ட அரசு கடன் பத்திரங்களில், 3,000 கோடி டாலர் (1,80,000 கோடி ரூபாய்) வரை அன்னிய நிதி நிறுவனங்கள் முதலீடு செய்ய வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வரம்பு இன்னும் எட்டப்படவில்லை.
அமெரிக்கா:மேலும், அமெரிக்கா - இந்தியா இடையே, கடன்பத்திரங்களின் வட்டி சார்ந்த வருவாயில் அதிக வித்தியாசம் உள்ளது. அதனால், வரும் மாதங்களில், அன்னிய நிதிநிறுவனங்களின் முதலீடு மேலும் உயரும். இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்காவின், 10 ஆண்டு கால முதிர்வை கொண்ட கடன் பத்திரங்களின், வட்டி சார்ந்த வருவாய், சராசரியாக, 2.52 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இந்திய கடன்பத்திரங்களில், இது, 8.83 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மோடி செய்த மாயம்இரண்டு வாரங்களில் ரூ.6,000 கோடி முதலீடு- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 20,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 20,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!