வர்த்தகம் » பொது
மலிவு விலை 'ஸ்மார்ட் போன்:சந்தை மதிப்பு ரூ.28 ஆயிரம் கோடி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 மே2014
04:18
புதுடில்லி : இந்தியாவில், 12 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான மலிவு விலை, 'ஸ்மார்ட் போன்'களின் விற்பனை விறுவிறுப்பாக உள்ளது.சீனா:நடப்பு 2014 - 15ம் நிதியாண்டில், இவ்வகை ஸ்மார்ட் போன்களின் விற்பனை எண்ணிக்கை, 6 கோடியாகவும், சந்தை மதிப்பு, 28 ஆயிரம் கோடி ரூபாயாகவும், அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஐ.டீ.சி.,நிறுவனத்தின், மூத்த சந்தை ஆய்வாளர் மானசி யாதவ் கூறியதாவது, ''சென்ற ஆண்டின் கடைசி காலாண்டில் (அக்.,-டிச.,), ஒட்டு மொத்த மொபைல் போன் விற்பனை எண்ணிக்கையில், 12 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான மலிவு விலை ஸ்மார்ட் போன்களின் பங்களிப்பு, 75 சதவீதமாக உள்ளது'' என்று தெரிவித்தார்.
சீனாவில், மொபைல் போன் விற்பனை சந்தையில், ஸ்மார்ட் போன்களின் பங்களிப்பு, 80 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள நிலையில், இந்தியாவில், இது, 20 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது என, கார்ட்னர் நிறுவனத்தின் முதன்மை ஆய்வாளர் அன்சுல் குப்தா தெரிவித்தார்.சென்ற ஆண்டில், ஸ்மார்ட் போன்களின் விற்பனை, மூன்று மடங்கு வளர்ச்சி கண்டு, 4.40 கோடியாக உயர்ந்துள்ளது.குறிப்பாக, உள்நாட்டைச் சேர்ந்த, மைக்ரோ மேக்ஸ், கார்பன் ஆகிய நிறுவனங்களின் குறைந்த விலை ஸ்மார்ட் போன்கள்
விற்பனை சிறப்பாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாய்ப்பு:மலிவு விலை ஸ்மார்ட் போன்களுக்கான வர்த்தக வாய்ப்புகளை சாதகமாக்கி கொள்ளும் வகையில், அண்மையில், மோட்டேரோலா (மோட்டோ இ), நோக்கியா (லுாமியா 630), இண்டெக்ஸ் (அக்குவா ஐ5 எச்டீ) உள்ளிட்ட நிறுவனங்கள், ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் 8.1 போன்ற நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் போன்களை, 12 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்துள்ளன.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 20,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 20,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!