பதிவு செய்த நாள்
20 மே2014
17:47
மும்பை : இந்திய பங்குசந்தைகள் நல்ல ஏற்றத்துடன் துவங்கிய போதும், லாபநோக்கோடு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்ததால் இறுதியில் சிறிய ஏற்றத்துடன் முடிந்தன. மத்தியில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தால் இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து உயர்வுடன் இருக்கின்றன. அந்நிய முதலீடுகள் அதிகரித்ததால் இன்றைய வர்த்தகமும் நல்ல ஏற்றத்துடன் இருந்தன. இருப்பினும் கடந்த நான்கு நாட்களாக பங்குசந்தைகளில் ஏற்பட்ட அதிரடி முன்னேற்றத்தால் முதலீட்டாளர்கள் லாபம் கருதி அதிகளவு பங்குகளை விற்பனை செய்தனர். இதனால் முக்கிய நிறுவன பங்குகள் சரிந்தன. குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஓஎன்ஜிசி., கோல் இந்தியா உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிந்ததால் இன்றயை வர்த்தகம் சிறு ஏற்றத்துடன் முடிந்தன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 13.83 புள்ளிகள் உயர்ந்து 24,376.88-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 11.95 புள்ளிகள் உயர்ந்து 7,275.50-ஆகவும் முடிந்தன. முன்னதாக வர்த்தகநேரத்தின் போது சென்செக்ஸ் அதிகபட்சமாக 24,587.16 வரையிலும், நிப்டி 7,350.65 வரையிலும் சென்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|