பதிவு செய்த நாள்
21 மே2014
01:41
மும்பை:அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், நேற்று சற்று குறைந்தது.நேற்று முன்தினம் ரூபாய் மதிப்பு, 58.60ஆக இருந்தது. இந்நிலையில், நேற்று அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 58.65ஆக காணப்பட்டது. இது, வர்த்தகத்தின் இடையே, 58.52 வரை சென்றது. இறுதியில், முன்தினத்தை விட, 4 காசுகள் குறைந்து, 58.64ல் நிலை கொண்டது.ஏற்றுமதி நிறுவனங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, ரிசர்வ் வங்கியின் உத்தரவின் பேரில், நேற்று வங்கிகள், அதிக அளவில் டாலரை வாங்கின. அதே சமயம், பங்குச் சந்தையில், அன்னிய முதலீடு குறைந்து காணப்பட்டது. இதன் தாக்கத்தால், டாலருக்கான தேவை அதிகரித்து, ரூபாய் மதிப்பு சற்று குறைய வழிவகுத்து உள்ளது.நடப்பாண்டில், ரூபாய் மதிப்பு, 5.22 சதவீதம் உயர்ந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான ஆசிய கரன்சிகளில், இந்தோனேஷியாவின் ருப்யாவை அடுத்து, இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|