பதிவு செய்த நாள்
21 மே2014
01:40
புதுடில்லி:நடப்பாண்டின் முதல் காலாண்டில் (ஜன.,–மார்ச்), இந்திய நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட தனியார் பங்கு முதலீடு, இரண்டு மடங்கு அதிகரித்து, 14,400 கோடி ரூபாயாக (240 கோடி டாலர்) வளர்ச்சி கண்டுள்ளது.இது, கடந்தாண்டின் இதே காலாண்டில், 7,200 கோடி ரூபாயாக (120 கோடி டாலர்) இருந்தது என, பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் (பி.டபிள்யூ.சி.,) நிறுவனம் தெரிவித்துள்ளது.தனியார் பங்கு முதலீட்டை அதிகளவு கவர்ந்ததில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதுசார்ந்த நிறுவனங்கள் முதலிடத்தில் உள்ளன. இவற்றில், 5,448 கோடி ரூபாய் (90.8 கோடி டாலர்) முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, எரிசக்தி துறை, 2,484 கோடி ரூபாய் (41.40 கோடி டாலர்) அளவிற்கு தனியார் பங்கு முதலீட்டை ஈர்த்துள்ளது.அதிக அளவில் தனியார் பங்கு முதலீட்டை ஈர்த்ததில், மும்பை நகரம் (5,662 கோடி ரூபாய்) முதலிடத்தை பிடித்துள்ளது. இதையடுத்து, டில்லி தலைநகர் பிராந்தியம் (3,186 கோடி ரூபாய்), ஜெய்ப்பூர் (282 கோடி), பரிதாபாத் (120 கோடி ரூபாய்) ஆகியவை உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|