பதிவு செய்த நாள்
21 மே2014
01:43
மும்பை:ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பீ.ஐ.,), அதன் ஊழியர்களுக்கு, 55.56 லட்சம் பங்குகளை, சலுகை விலையில் வழங்க திட்டமிட்டு உள்ளது.இது தொடர்பாக, வங்கியின் நிர்வாக குழு விரைவில் கூடி, வழங்கப்பட உள்ள சலுகை குறித்து முடிவு செய்ய உள்ளது.இதையடுத்து, திட்டம் அறிவிக்கப்படும் நாளுக்கு, முந்தைய இரு வாரங்களில், தேசிய பங்குச் சந்தையில், எஸ்.பீ.ஐ., பங்கின் அதிக பட்ச ஏற்ற, இறக்கத்தின் அடிப்படையில், சராசரியாக பங்கின் விலை நிர்ணயிக்கப்படும்.
எனினும், ஒரு பங்கின் விலை, 1,565 ரூபாய்க்கு குறைவாக நிர்ணயிக்க வாய்ப்பில்லை.இதன்படி, தொழிலாளர்கள் பங்கு வாங்கும் திட்டத்தின் (இ.எஸ்.பி.எஸ்.,) கீழ், 55.56 லட்சம் பங்குகளை விற்பனை செய்து, 870 கோடி ரூபாய் திரட்ட முடியும் என, இவ்வங்கியை சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.நேற்று, தேசிய பங்கு சந்தையில் வர்த்தகத்தின் இறுதியில், எஸ்.பீ.ஐ., பங்கு ஒன்று, 2,௫௨௫ ரூபாய் என்ற அளவில் காணப்பட்டது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|