பதிவு செய்த நாள்
24 மே2014
00:23
புதுடில்லி:எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங் களுக்கு, சென்ற நிதியாண்டிற்கான, மானியமாக, 56,384 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என, ஓ.என்.ஜி.சி., நிறுவனத்திற்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்ற, 2013 – 14ம் நிதியாண்டில், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றை அடக்க விலைக்கும் குறைவாக விற்பனை செய்த வகையில், எண்ணெய் சந்தைப்படுத்தும் மூன்று பொதுத் துறை நிறுவனங்களுக்கு, 1.40 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
மேற்கண்ட இழப்பிற்காக அந்நிறுவனங்களுக்கு, மத்திய அரசு, 70,772 கோடி ரூபாய் ரொக்க மானியம் வழங்க வேண்டும். எஞ்சிய இழப்பிற்கு, ஓ.என்.ஜி.சி., (56,384 கோடி) ஆயில் இந்தியா (8,737 கோடி) மற்றும் கெயில் (1,900 கோடி) ஆகிய மூன்று பொதுத் துறை நிறுவனங்களும் வழங்க வேண்டும்.இதன்படி, மத்திய அரசு, கடந்த நிதி ஆண்டின் மூன்று காலாண்டுகளில், 35,772 கோடி ரூபாய் மானியம் வழங்கிஉள்ளது. அடுத்து, நான்காவது காலாண்டிற்கான, 35 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்க வேண்டும்.
இந்நிலையில், எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கான மானிய பங்களிப்பை வழங்குமாறு, ஓ.என்.ஜி.சி.,க்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.ஓ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா மற்றும் கெயில் வழங்க உள்ள மொத்த மானியத்தில் (67,021 கோடி ரூபாய்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு, அதிகபட்சமாக, 34,673 கோடி ரூபாய் கிடைக்கும்.பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங் களுக்கு முறையே, 15,576 கோடி மற்றும் 16,770 கோடி ரூபாய் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|