பதிவு செய்த நாள்
24 மே2014
00:25
புதுடில்லி:லேப்டாப், நோட்பேட், ஸ்மார்ட்போன் என, பல சாதனங் களின் போட்டியால், தனி நபர் சார்ந்த கம்ப்யூட்டர் பயன்பாடு குறைந்துள்ளது.
சென்ற ஜன., – மார்ச் வரையிலான காலாண்டில், கம்ப்யூட்டர் விற்பனை, 25 சதவீதம் குறைந்து, 20.30 லட்சமாக சரிவடைந்துள்ளது.இது, சென்ற ஆண்டின் இதே காலத்தில், 2.10 லட்சமாக இருந்தது.மதிப்பீட்டு காலாண்டில், கம்ப்யூட்டர் விற்பனையில், எச்.பி., நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, 23.1 சதவீத சந்தை பங்களிப்புடன் டெல் நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது.20.4 சதவீத சந்தை பங்களிப்புடன் எச்.பி., நிறுவனம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில், லெனோவா (14.9 சதவீதம்), ஏசர் (10.9 சதவீதம்) ஆகியவை உள்ளன.
பொருளாதார சுணக்க நிலையால், கம்ப்யூட்டர் விற்பனை மந்தமடைந்துள்ளது. எனினும், வரும் மாதங்களில், இதற்கான தேவை அதிகரிக்கும் என, ஐ.டீ.சி., யின் சந்தை ஆய்வாளர் மனிஷ் யாதவ் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|