பதிவு செய்த நாள்
29 மே2014
00:15
புதுடில்லி:ஆசியாவை பொறுத்தவரை, இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய் வதை, அன்னிய நிதி நிறுவனங்கள் (எப்.ஐ.ஐ.,), அதிகம் விரும்புகின்றன என, எச்.எஸ்.பீ.சி., தெரிவித்துள்ளது.
ஆசியா: உதாரணமாக, நடப்பு மே மாதத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில், நிகர அளவில், 13,800 கோடி ரூபாய் (230 கோடி டாலர்) முதலீடு செய்துள்ளன. இதன் மூலம், நடப்பாண்டில் அவற்றின் மொத்த முதலீடு, 46,800 கோடி ரூபாய் (780 கோடி டாலர்) ஆக உள்ளது.இந்தியாவை அதிகம் விரும்பும், எப்.ஐ.ஐ.,க்கள், மலேசியாவில் முதலீடு மேற்கொள்வதில் ஆர்வம் காட்டாமல் உள்ளன.
நடப்பாண்டு ஜனவரி முதல் மே 26ம் தேதி வரையிலான காலத்தில்,அன்னிய முதலீட்டாளர்கள், ஆசிய நாடுகளில் (ஜப்பான் தவிர்த்து), 1,880 கோடி டாலர் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.இதில், இந்தியாவின் பங்களிப்பு மட்டும், 780 கோடி டாலராக உள்ளது.இதையடுத்து, தைவான் (630 கோடி டாலர்) மற்றும் இந்தோனேஷியா (360 கோடி டாலர்) ஆகிய நாடுகள் உள்ளன.மேலும், பிலிப்பைன்ஸ் மற்றும் கொரியாவில் முறையே, 100 கோடி டாலர் மற்றும் 90 லட்சம் டாலர் மதிப்பிலான பங்குகளை, அன்னிய நிறுவனங்கள் வாங்கியுள்ளன.
நெருக்கடி:அதேசமயம், தாய்லாந்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக, அந் நாட்டின் பங்குச் சந்தைகளிலிருந்து அதிகளவிலான தொகையை, எப்.ஐ.ஐ.,க்கள் விலக்கி கொண்டுள்ளன.சென்ற ஆண்டு, எப்.ஐ.ஐ.,க்கள் மேற்கொண்ட மொத்த முதலீட்டில், 78 சதவீதம், நடப்பாண்டின் முதல் ஐந்து மாதங்களிலேயே பெறப்பட்டுள்ளது என, எச்.எஸ்.பீ.சி., தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|