பதிவு செய்த நாள்
03 ஜூன்2014
00:28
புதுடில்லி :சென்ற ஜன., – மே வரையிலான ஐந்து மாதங்களில், இந்தியாவின் காபி ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில், 9.32 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2,567 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இது, கடந்தாண்டின் இதே காலத்தில், 2,348 கோடி ரூபாயாக இருந்தது.சர்வதேச அளவில், காபி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள பிரேசிலில், இதன் உற்பத்தி சரிவடையும் என, எதிர்பார்க்கப் படுகிறது. இதனால், உலகளவில் காபி விலை உயர்ந்து வருகிறது.
சர்வதேச சந்தையில் காபி விலை, கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது, நடப்பாண்டு, 80 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.இதையடுத்து, ஏற்றுமதி செய்யப்பட்ட ஒரு டன் காபியின் சராசரி விலை, 9 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,47,394 ரூபாயிலிருந்து, 1,61,160 ஆக அதிகரித்துள்ளது என, என, காபி வாரியம் தெரிவித்துள்ளது.
மதிப்பின் அடிப்படையில், காபி ஏற்றுமதி சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ள நிலையில், அளவின் அடிப்படையில் இதன் ஏற்றுமதி, 1,59,295 டன்னிலிருந்து, 1,59,275 டன்னாக சற்று சரிவடைந்துள்ளது.மேற்கண்ட ஏற்றுமதியில், ரோபஸ்டா மற்றும் அராபிகா வகை காபியின் பங்களிப்பு முறையே, 73,645 டன் மற்றும் 43,465 டன் என்ற அளவில் உள்ளன.மேலும், இன்ஸ்டன்ட் காபி ஏற்றுமதி, 91 சதவீதம் அதிகரித்து, 9,850 டன்னிலிருந்து, 18,875 டன்னாக மிகவும் உயர்ந்துள்ளது.
நடப்பு 2013–14ம் பருவத்தில் (அக்.,–செப்.,), நாட்டின் ஒட்டு மொத்த காபி உற்பத்தி, 3,11,500 டன்னாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இது, இதற்கு முந்தைய பருவ உற்பத்தியுடன் (3,18,200 டன்) ஒப்பிடுகையில், 2.1 சதவீதம் குறைவாகும்.இத்தாலி, ஜெர்மனி, பெல்ஜியம், ஜோர்டான், துருக்கி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு, இந்தியா அதிகளவில் காபியை ஏற்றுமதி செய்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|