பதிவு செய்த நாள்
03 ஜூன்2014
00:31
புதுடில்லி: இந்திய விமான துறையின் தரக் குறியீடு தொடர்பான பிரச்னைக்கு உதவ, ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு முன்வந்துள்ளது.குறைப்புஇந்திய விமான போக்குவரத்தில், தரை கட்டுப்பாட்டு பொறியாளர்கள் விமான பயண ஆய்வாளர்கள் ஆகியோர், போதிய அளவிற்கு இல்லை என்பது உள்ளிட்ட அம்சங்களை சுட்டிக் காட்டி, பாதுகாப்பான விமான சேவைக்கான தரக் குறியீட்டை, அமெரிக்க விமான போக்குவரத்து துறை (எப்.ஏ.ஏ.,), குறைத்துள்ளது.
சென்ற ஜனவரியில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையால், ஏர் – இந்தியா, ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்கள், அமெரிக்காவிற்கு புதிய விமான சேவைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.அது மட்டுமின்றி, அடுத்து, ஐரோப்பிய கூட்டமைப்பு, ஜப்பான், மற்றும் இதர முன்னேறிய நாடுகளும், இந்தியாவின் பாதுகாப்பான விமான சேவை தொடர்பான தரக் குறியீட்டை குறைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.பணி நியமனம்இதையடுத்து, எப்.ஏ.ஏ., சுட்டிக்காட்டிய, இரு முக்கிய அம்சங்களை பூர்த்தி செய்யும் நோக்கில், முதற்கட்டமாக, 35 ஆய்வாளர்கள் தேர்வு செய்யப் பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக, விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் (டீ.ஜி.சி.ஏ.,), எப்.ஏ.ஏ.,க்கு கடிதம் எழுதியுள்ளது.அதில், தரக் குறியீட்டை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
இதனிடையே, இப்பிரச்னை தொடர்பாக, இந்திய விமான துறைக்கு உதவ, எப்.ஏ.ஏ., முன்வந்துள்ளது.ஒப்புதல்இதற்காக, அமெரிக்க வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு முகமை (யு.எஸ்.டி.டீ.ஏ.,)யின் நிதியுதவியில், டி.டபிள்யு.ஜி., என்ற தனியார் ஆலோசனை நிறுவனம் அமர்த்தப்பட்டுள்ளது. இந்திய விமான போக்குவரத்தில் பாதுகாப்பு சார்ந்த ஆலோசனைகளை, இந்நிறுவனம் ஓராண்டிற்கு வழங்கும்.இத்திட்டத்திற்கு, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொருளாதார விவகாரங்கள் துறை மற்றும் வெளிவிவகார துறை அமைச்சகம் ஆகியவை ஒப்புதல் வழங்கியுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|