பதிவு செய்த நாள்
03 ஜூன்2014
00:32
புதுடில்லி ;நாட்டின் முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி, சென்ற ஏப்ரல் மாதத்தில், 4.2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 3.7 சதவீதம் என்ற அளவில் இருந்தது.குறிப்பாக, மின்சாரம், உரம், சிமென்ட் ஆகிய துறைகள், உற்பத்தியில் சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளன. முக்கிய எட்டு துறைகளில் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள், உருக்கு, சிமென்ட், மின்சாரம், உரம் ஆகியவை அடங்கியுள்ளன.தொழில் துறை உற்பத்தியை கணக்கிடுவதில், மேற்கண்ட எட்டு துறைகளின் பங்களிப்பு, 38 சதவீதமாக உள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில், மின் துறையின் உற்பத்தி, 11.2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. உரம், சிமென்ட், நிலக்கரி ஆகிய துறைகளின் உற்பத்தி முறையே, 11.1 சதவீதம், 6.7 சதவீதம் மற்றும் 3.3 சதவீதம் அதிகரித்து உள்ளன. உருக்கு துறையின் உற்பத்தி, 3.1 சதவீதம் உயர்ந்துள்ளது.அதேசமயம், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் துறைகளின் உற்பத்தி முறையே, 0.1 சதவீதம், 7.7 சதவீதம் மற்றும் 2.2 சதவீதம் பின்னடைவை கண்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|