பதிவு செய்த நாள்
06 ஜூன்2014
00:02
மும்பை :சர்வதேச அளவில், ரொக்கம் சாரா பரிவர்த்தனையில், இந்தியா 13வது இடத்தில் உள்ளது.
இந்தியர்கள் ரொக்கம் இல்லாமல் கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பல்வேறு பொருட்களையும், சேவைகளையும் பெறுவது அதிகரித்து வருகிறது. இதனால், பல வணிக நிறுவனங்கள், மேற்கண்ட கார்டுகளை பயன்படுத்துவதற்கான சாதனங்களை அதிக அளவில் வாங்கி வருகின்றன. அதற்கு ஈடுகொடுக்கும் வகையில், உள்நாட்டு நிறுவனங்களின் உற்பத்தி இல்லை. நாட்டின் சில்லரை வர்த்தக சந்தையில், 80 சதவீத வணிக நிறுவனங்களிடம், டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் சாதனங்கள் இல்லை.
எனினும், கடந்த 2013ம் ஆண்டு, இவ்வகை கார்டுகள் வாயிலான பணப் பரிவர்த்தனை, முந்தைய ஆண்டை விட, 35 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.அதனால், வரும் ஆண்டுகளில், இந்தியாவில் ரொக்கம் சாராத, கிரெடிட், டெபிட் கார்டுகள் வாயிலான பணப் பரிவர்த்தனை குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்கும். இதன் காரணமாக, இவ்வகை கார்டுகளின் பயன்பாட்டிற்கான சாதனங்களின் தேவையும், அது சார்ந்த வர்த்தக வாய்ப்பும் பெருகும் என, ‘பிரோஸ்ட் அண்டு சுலைவன் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|