சீனாவின் நடவடிக்கையால்பருத்தி ஏற்றுமதி பாதிப்புசீனாவின் நடவடிக்கையால்பருத்தி ஏற்றுமதி பாதிப்பு ... கோதுமை கொள்முதல் இலக்கு தவறியது கோதுமை கொள்முதல் இலக்கு தவறியது ...
தெலுங்கானா உதயத்தால் சிமென்ட் துறைக்கு புத்துயிர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2014
01:09

தனி தெலுங்கானா போராட்டத்தால், துவண்டு கிடந்த தென்னிந்திய சிமென்ட் துறை, தற்போது சுறுசுறுப்படைந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் உதயமானதை தொடர்ந்து, முடங்கி இருந்த அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை விரைந்து முடிக்க, முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான புதிய அரசு, திட்டமிட்டுள்ளது.
உற்பத்தி திறன்:இது, மந்த நிலையில் இருந்த தென்னிந்திய சிமென்ட் துறைக்கு புத்துயிரூட்டி, சிமென்டிற்கான தேவையை அதிகரிக்க செய்யும் என, எதிர்பார்க்கப் படுகிறது.தென்னிந்தியாவின் மொத்த சிமென்ட் உற்பத்தி திறன், 12.5 கோடி டன்னாக உள்ளது. இதில், 5.60 கோடி டன் என்ற அளவிற்கே, தென்னிந்தியாவில் சிமென்ட் பயன்பாடு உள்ளது. இது தவிர, 1 – 1.5 கோடி டன் சிமென்ட், இதர மாநிலங்களின் பயன்பாட்டிற்கு அனுப்பப்படுகிறது.
தென்னிந்திய மாநிலங்கள், சிமென்ட் உற்பத்தி திறனை அதிகபட்சம் உயர்த்திக் கொண்டு உள்ளன. ஆனால், அதற்கேற்ப சிமென்டிற்கான தேவை அதிகரிக்கவில்லை.தனி தெலுங்கானா போராட்டம், ஆந்திரா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட கடுமையான மின் தட்டுப்பாடு போன்றவற்றால், பல்வேறு திட்டங்களின் கட்டுமான பணிகள் சுணக்கம் கண்டன.
இதனால், கடந்த, 2010–14ம் நிதியாண்டுகளில் சிமென்ட் துறையின், ஆண்டு சராசரி வளர்ச்சி ஒரு சதவீதமாக குறைந்து விட்டது. இது, கடந்த, 2006 – 10ம் நிதியாண்டுகளில், 9 சதவீதமாக இருந்தது.
அதிக விலை:சிமென்டிற்கான தேவை குறைந்ததால், கடந்த ஓராண்டாக அதன் விலை, நிலையாக உள்ளது. எனினும், வட இந்தியாவை விட, தென்னிந்தியாவில் (ஆந்திரா, தெலுங்கானா தவிர்த்து) சிமென்ட் விலை அதிகமாகவே உள்ளது. தமிழகத்தில், ஒரு மூட்டை (50 கிலோ) சிமென்ட் விலை,330–350 ரூபாயாக உள்ளது.இது, கடந்த ஆண்டு, 300 – 330 ரூபாயாக இருந்தது. கர்நாடக மாநிலம், பெங்களூரில் ஒரு மூட்டை சிமென்ட் விலை, 280 – 290 ரூபாயாகவும், மங்களூரில், 310 ரூபாயாகவும் உள்ளது. கேரளாவில் சிமென்ட் விலை, மூட்டைக்கு, 15 ரூபாய் அதிகரித்து, 325 – 330 ரூபாயாக உயர்ந்துள்ளது.
தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில், ஒரு மூட்டை சிமென்ட் விலை, 230 ரூபாயாகவும், கடலோர மாவட்டங்கள் மற்றும் விசாகப்பட்டினத்தில், 260 –270 ரூபாயாகவும் உள்ளது. பெரும்பான்மை:ராயலசீமாவில், கடந்த டிசம்பரை விட, மூட்டைக்கு, 20 ரூபாய் அதிகரித்து, 280 – 290 ரூபாயாக உள்ளது.தென்னிந்தியாவின் மொத்த சிமென்ட் உற்பத்தி திறனில், ராயலசீமாவின் பங்களிப்பு, பெரும்பான்மையாக உள்ளது.வட மாநிலங்களில், ஒரு மூட்டை சிமென்ட் விலை, 265 – 350 ரூபாயாக உள்ளது என, சிமென்ட் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)