பதிவு செய்த நாள்
10 ஜூன்2014
00:21
புதுடில்லி: சென்ற மே மாதத்தில், இந்தோனேஷியா, மலேசியா மற்றும் இதர நாடுகளுக்கான புண்ணாக்கு ஏற்றுமதி குறைந்ததால், அதன் மொத்த ஏற்றுமதி, 49 சதவீதம் சரிவடைந்து, 1.53 லட்சம் டன்னாக வீழ்ச்சி கண்டுள்ளது.இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 2.98 லட்சம் டன்னாக மிகவும் அதிகரித்து காணப்பட்டது என, எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் (எஸ்.இ.ஏ.,) தெரிவித்துள்ளது.குறிப்பாக, சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, மதிப்பீட்டு மாதத்தில், 96,492 டன்னிலிருந்து, வெறும் 8,226 டன்னாக வீழ்ச்சி கண்டுள்ளது.இதே போன்று, தவிட்டு புண்ணாக்கு ஏற்றுமதியும், 7,573 டன்னிலிருந்து, 400 டன்னாக சரிவடைந்துள்ளது.
இருப்பினும், கடுகு புண்ணாக்கு ஏற்றுமதி, 88,284 டன்னிலிருந்து, 95,847 டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது.கணக்கீட்டு மாதத்தில், தென் கொரியாவிற்கான புண்ணாக்கு ஏற்றுமதி, 1.39 லட்சம் டன்னிலிருந்து, 1.09 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.இதே போன்று, இந்தோனேஷியாவிற்கான இதன் ஏற்றுமதி, 12,538லிருந்து, 6,299 டன்னாகவும், மலேசியாவிற்கான ஏற்றுமதி, 2,800 லிருந்து, வெறும் 400 டன்னாகவும் சரிவடைந்துள்ளன.தைவான். மியான்மர் ஆகிய நாடுகளுக்கான புண்ணாக்கு ஏற்றுமதி மறுபடியும் சுணக்கம் கண்டுள்ளது.சென்ற மே மாதத்தில், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு புண்ணாக்கு ஏற்றுமதி மேற்கொள்ளப்படவில்லை என, எஸ்.இ.ஏ., தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|