பதிவு செய்த நாள்
11 ஜூன்2014
00:21
மும்பை:வரும் செப்டம்பருடன் முடியும், 2013–14ம் பருத்தி பருவத்தில், அதன் உற்பத்தி, 388.25 லட்சம் பொதிகளாக (ஒரு பொதி–170 கிலோ) இருக்கும் என, இந்திய பருத்தி கழகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குஜராத்:அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:நடப்பு பருவத்தில், குஜராத்தின் பருத்தி உற்பத்தி, 120.80 லட்சம் பொதிகளாக இருக்கும். இது, முந்தைய 2012–13ம் பருவத்தில், 83.30 லட்சம் பொதிகளாக இருந்தது.இதே காலத்தில், மகாராஷ்டிராவின் பருத்தி உற்பத்தி, 72.50 லட்சத்தில் இருந்து, 79.25 லட்சம் பொதிகளாக உயரும்.நடப்பு பருவத்தில், நாட்டின் மொத்த பருத்தி வினியோகம், 447.50 லட்சம் பொதிகளாக இருக்கும்.
இதில், உள்நாட்டு பயன்பாடு, 295 லட்சம் பொதிகளாகவும், கையிருப்பு, 152.40 லட்சம் பொதிகள் என்ற அளவிலும் இருக்கும்.சென்ற மே இறுதி நிலவரப்படி, பருத்தி வரத்து, 370.25 லட்சம் பொதிகளாக உள்ளது. நடப்பு பருவத்தில்,பருத்தி உற்பத்தியில் நாடு சாதனை படைத்துள்ளது.
ராஜஸ்தான்:சிறிய அளவில் பருத்தி விவசாயம் நடைபெற்ற ராஜஸ்தான், கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும், குஜராத் போன்று, குறிப்பிடத்தக்க அளவிற்கு அதன் மகசூல் உள்ளது. இதனால் இந்தியா, வரும் ஆண்டுகளில், சர்வதேச பருத்தி உற்பத்திக்கான சராசரி அளவை எட்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|