பதிவு செய்த நாள்
12 ஜூன்2014
00:59
புதுடில்லி: நடப்பு 2014 – 15ம் நிதியாண்டின், ஏப்., – மே மாதங்களில் முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு, 4.80 சதவீதம் வளர்ச்சி கண்டு, 9.59 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
பாரதீப்: இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 9.15 கோடி டன்னாக இருந்தது என, இந்திய துறைமுகங்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தற்காலிக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:உள்நாட்டில், 13 முக்கிய துறைமுகங்கள் செயல்பட்டு வருகின்றன.இதில், 10 துறைமுகங்கள் கையாண்ட சரக்கின் அளவு அதிகரித்தும், 3 துறைமுகங்கள் கையாண்ட சரக்கின் அளவு சரிவடைந்தும் உள்ளன.மதிப்பீட்டு காலத்தில், பாரதீப் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 1.53 சதவீதம் உயர்ந்து, 1.15 கோடி டன்னிலிருந்து, 1.17 கோடி டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது.
விசாகப்பட்டினம் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 4.10 சதவீதம் அதிகரித்து, 99.86 லட்சம் டன்னிலிருந்து, 1.04 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.\தமிழகத்தில் உள்ள காமராஜர் துறைமுகம் (முன்பு எண்ணுார்) கையாண்ட சரக்கு, 13.90 சதவீதம் என்ற அளவில் சிறப்பாக வளர்ச்சி கண்டு, 41.80 லட்சம் டன்னிலிருந்து, 47.61 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.இதே போன்று, சென்னை துறைமுகம் கையாண்ட சரக்கு, 4.43 சதவீதம் வளர்ச்சி கண்டு, 84.41 லட்சம் டன்னிலிருந்து, 88.15 லட்சம் டன்னாகவும், வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கையாண்ட சரக்கு, 13.67 சதவீதம் உயர்ந்து, 44.27 லட்சம் டன்னிலிருந்து, 50.32 லட்சம் டன்னாகவும் அதிகரித்துள்ளன. கொச்சி துறைமுகம் கையாண்ட சரக்கு, 7.74 சதவீதம் வளர்ச்சி கண்டு, 34.49 லட்சம் டன்னிலிருந்து, 37.16 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
மும்பை மர்ம கோவா துறைமுகம் கையாண்ட சரக்கு, 24.48 சதவீதம் அதிகரித்து, 18.75 லட்சம் டன்னிலிருந்து, 23.34 லட்சம் டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது.மும்பை துறைமுகம் கையாண்ட சரக்கு, 14.35 சதவீதம் அதிகரித்து, 87.33 லட்சம் டன்னிலிருந்து, 99.86 லட்சம் டன்னாகவும், ஜவகர்லால் நேரு போர்ட் டிரஸ்ட் (ஜே.என்.பி.டி.,) கையாண்ட சரக்கு, 3.91 சதவீதம் உயர்ந்து, 1.05 கோடியிலிருந்து, 1.09 கோடி டன்னாகவும் வளர்ச்சி கண்டுள்ளன.கோல்கட்டாவில் உள்ள இரண்டு துறைமுகங்களில், கோல்கட்டா டாக் சிஸ்டம்ஸ் கையாண்ட சரக்கின் அளவு, 12.36 சதவீதம் அதிகரித்து, 18.36 லட்சம் டன்னிலிருந்து, 20.63 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
கண்ட்லா:அதேசமயம், ஹால்டியா டாக் காம்ப்ளக்ஸ் கையாண்ட சரக்கு, 1.59 சதவீதம் சரிவடைந்து, 45.23 லட்சம் டன்னிலிருந்து, 44.51 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.ஒட்டு மொத்த அளவில், மேற்கண்ட இரு துறைமுகங்கள் கையாண்ட சரக்கு, 2.44 சதவீ
இதே போன்று, நியு மங்களூர் துறைமுகம் கையாண்ட சரக்கு, 3.61 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 66.53 லட்சம் டன்னிலிருந்து, 64.13 லட்சம் டன்னாகவும், கண்ட்லா துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 0.40 சதவீதம் குறைந்து, 1.54 கோடி டன்னிலிருந்து, 1.53 கோடி டன்னாகவும் சரிவடைந்துள்ளன.இவ்வாறு புள்ளிவிவரத்தில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|