பதிவு செய்த நாள்
18 ஜூன்2014
14:14
புதுடில்லி: ரயில் கட்டணங்களை உயர்த்த வேண்டும்' என, ரயில்வே துறைக்கு, ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளது. இதனால் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ள ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா, இது குறித்து தகுந்த ஆலோசனை பெறுவதற்காக, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.
பிரதமர் மோடி, ரயில் கட்டணங்களை உயர்த்த விரும்பவில்லை. குறிப்பாக, 'இரண்டாம் வகுப்பு மற்றும், 'ஏசி' மூன்றாம் வகுப்பு பயண கட்டணங்களை உயர்த்தக் கூடாது' என, அவர் கூறியுள்ளார். அது போல், சரக்கு கட்டணத்தில், மிகக் குறைவாக, 5 சதவீதம் உயர்த்திக் கொள்ளலாம் என, மோடி பச்சைக்கொடி காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் ரயில்வே பட்ஜெட் மற்றும் மத்திய பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கு முன் மோடியை சந்தித்து, கட்டண உயர்வு குறித்து விரிவாக ஆலோசனை நடத்த, ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா முடிவு செய்துள்ளார்.
ரூ.8,000 கோடி திரட்ட வேண்டும்
கடந்த பிப்ரவரியில், அப்போதைய பிரதமர், மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ரயில்வே பட்ஜெட்டை பார்லிமென்டில் சமர்ப்பித்தது. இடைக்கால பட்ஜெட்டான அதை, கர்நாடகாவைச் சேர்ந்த, அப்போதைய ரயில்வே அமைச்சர், மல்லிகார்ஜுன கார்கே சமர்ப்பித்தார்.அதில், கட்டண உயர்வுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
மாறாக, மே மாதம், 'பயணிகள் மற்றும் சரக்கு கட்டணங்கள் உயர்த்தப்படும்' என அறிவிப்பு வெளியானது; எனினும், அதுவும் முந்தைய அரசால் நிறுத்தப்பட்டது. இதனால், ரயில்வே துறை போதுமான நிதி இல்லாமல் தடுமாறுகிறது. பயணிகள் மற்றும் சரக்கு கட்டணங்களை உயர்த்துவதன் மூலம், 8,000 கோடி ரூபாய் திரட்ட ரயி?ல்வே வாரியம் முடிவு செய்துள்ளது.இதனால், ரயில்வே கட்டணங்களை உயர்த்துங்கள் என, ரயில்வே துறைக்கு, ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|