பதிவு செய்த நாள்
20 ஜூன்2014
16:42
மும்பை : வாரத்தின் கடைசிநாளில் இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன. ஈராக்கில் நடந்து வரும் போரால், கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை அதிகரித்து இருப்பதாலும், இதனால், எண்ணெய் தொடர்பான பங்குகள் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே வருவதாலும், அந்நிய முதலீடுகள் குறைந்து வருவதாலும் இந்திய பங்குசந்தைகளில் சரிவு காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 96.29 புள்ளிகள் சரிந்து 25,105.51-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 29.25 புள்ளிகள் சரிந்து 7,511.45-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, மாருதி சுசூகி, எஸ்பிஐ., ஐசிஐசிஐ., டாக்டர் ரெட்டி, கெயில் இந்தியா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஓஎன்ஜிசி., செசா ஸ்டெர்லைட், சன்பார்மா, டாடா பவர் உள்ளிட்ட நிறுவன பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன. அதேசமயம் இன்போசிஸ், ஆக்சிஸ், பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல், கோல் இந்தியா, டாடா ஸ்டீல், டிசிஎஸ்., உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|