பதிவு செய்த நாள்
23 ஜூன்2014
17:09
மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்த வேளையில், வாரத்தின் முதல்நாளும் சரிவிலேயே முடிந்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் பங்குசந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின. ஆனால், ஈராக்கில் நிலவும் தொடர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது, ஐடிசி., நிறுவன பங்குகள் விலை பெரும் சரிவை சந்தித்தது போன்ற காரணங்களால் பங்குசந்தைகள் இன்று சரிவை சந்தித்தன. அதிலும் கடந்த 3 வாரங்களில் இல்லாத அளவுக்கு பங்குசந்தைகள் சரிவை சந்தித்துள்ளன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 74.19 புள்ளிகள் சரிந்து 25,031.32-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 18.10 புள்ளிகள் சரிந்து 7,493.35-ஆகவும் முடிந்தன. முன்னதாக வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 25 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சென்றது.
இன்றைய வர்த்தகத்தில் ஐடிசி., நிறுவன பங்குகள் விலை 6.5 சதவீதம் சரிந்தது. கடந்த 2013 செப்டம்பருக்கு பிறகு இந்நிறுவன பங்குகள் விலை இந்தளவு சரிவது இதுவே முதல்முறையாகும். இவை தவிர்த்து எப்எம்சிஜி., பங்குகள் விலை 4.06 சதவீதமும், ஐடி தொடர்பான பங்குகள் விலை 1.56 சதவீதமும் சரிந்தன. அதேசமயம் சர்க்கரை தொடர்பான பங்குகள் விலை 11 சதவீதம் அளவுக்கு உயர்ந்து இருந்தன. மேலும் ஹீரோ மோட்டோ கார்ப், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, பெல், போன்ற நிறுவன பங்குகளும் ஏற்றத்தில் காணப்பட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|