சர்க்கரைக்கான இறக்குமதி வரி 40 சதவீதமாக அதிகரிப்புசர்க்கரைக்கான இறக்குமதி வரி 40 சதவீதமாக அதிகரிப்பு ... ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.40 குறைவு ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.40 குறைவு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்கு பங்குசந்தைகளில் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2014
17:09

மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்த வேளையில், வாரத்தின் முதல்நாளும் சரிவிலேயே முடிந்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் பங்குசந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின. ஆனால், ஈராக்கில் நிலவும் தொடர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது, ஐடிசி., நிறுவன பங்குகள் விலை பெரும் சரிவை சந்தித்தது போன்ற காரணங்களால் பங்குசந்தைகள் இன்று சரிவை சந்தித்தன. அதிலும் கடந்த 3 வாரங்களில் இல்லாத அளவுக்கு பங்குசந்தைகள் சரிவை சந்தித்துள்ளன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 74.19 புள்ளிகள் சரிந்து 25,031.32-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 18.10 புள்ளிகள் சரிந்து 7,493.35-ஆகவும் முடிந்தன. முன்னதாக வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 25 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சென்றது.
இன்றைய வர்த்தகத்தில் ஐடிசி., நிறுவன பங்குகள் விலை 6.5 சதவீதம் சரிந்தது. கடந்த 2013 செப்டம்பருக்கு பிறகு இந்நிறுவன பங்குகள் விலை இந்தளவு சரிவது இதுவே முதல்முறையாகும். இவை தவிர்த்து எப்எம்சிஜி., பங்குகள் விலை 4.06 சதவீதமும், ஐடி தொடர்பான பங்குகள் விலை 1.56 சதவீதமும் சரிந்தன. அதேசமயம் சர்க்கரை தொடர்பான பங்குகள் விலை 11 சதவீதம் அளவுக்கு உயர்ந்து இருந்தன. மேலும் ஹீரோ மோட்டோ கார்ப், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, பெல், போன்ற நிறுவன பங்குகளும் ஏற்றத்தில் காணப்பட்டன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)