பதிவு செய்த நாள்
01 ஜூலை2014
07:24
மும்பை :பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகளால், பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நேற்று விறுவிறுப்புடன் காணப்பட்டது.குறிப்பாக, பெறியியல், வங்கி, மருந்து ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளை, முதலீட்டாளர்கள் போட்டி போட்டு வாங்கியதை அடுத்து, ‘சென்செக்ஸ்’ மற்றும் ‘நிப்டி’ முறையே, 1.25 சதவீதம் மற்றும் 1.37 சதவீதம் உயர்ந்தன.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 313.86 புள்ளிகள் அதிகரித்து, 25,413.78 புள்ளிகளில் நிலைபெற்றது.‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், மகிந்திரா, மாருதி, டாட்டா மோட்டார்ஸ் மற்றும் விப்ரோ தவிர்த்து, 26 நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 102.55 புள்ளிகள் உயர்ந்து, 7,611.35 புள்ளிகளில் நிலைகொண்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|