பதிவு செய்த நாள்
02 ஜூலை2014
00:42
புதுடில்லி ;மத்திய அரசு, இறக்குமதி செய்யப்படும், 10 கிராம் தங்கத்தின் மதிப்பை, 428 டாலராகவும், ஒரு கிலோ வெள்ளியின் மதிப்பை, 688 டாலராகவும் உயர்த்தியுள்ளது.இவற்றின், முந்தைய இறக்குமதி மதிப்பு முறையே, 411 டாலர் மற்றும் 632 டாலராக இருந்தது.மத்திய அரசு, சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ப, தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதி மதிப்பை, இருவாரங்களுக்கு ஒருமுறை நிர்ணயித்து வருகிறது. அதன் அடிப்படையில், அவற்றுக்கு சுங்கவரி விதிக்கப்படுகிறது.ஈராக் மற்றும் உக்ரைன் நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், உலகளவில், தங்கம் விலை ஏற்றம் கண்டு வருகிறது. இதன் அடிப்படையில், உள்நாட்டில், தங்கம் இறக்குமதி மதிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க, மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளால், சென்ற ஏப்ரலில், தங்கம் இறக்குமதி, 74 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 175 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|