பதிவு செய்த நாள்
07 ஜூலை2014
00:32
புதுடில்லி:தொழில்நுட்ப ஜவுளி துறையின் சந்தை மதிப்பு, வரும் 2023ம் ஆண்டிற்குள், 3,200 கோடி டாலராக (1.92 லட்சம் கோடி ரூபாய்) உயரும்.
இது, தற்போது,1,400 கோடி டாலர் (84ஆயிரம் கோடி ரூபாய்) என்ற அளவில் உள்ளது என, பி.எச்.டி.,சேம்பர் ஆப் காமர்ஸ் தெரிவித்துள்ளது.விண்வெளி வீரர்கள் அணியும் ஆடைகள்,குண்டு துளைக்காத உடைகள்,தீப்பிடிக்காத ஆடைகள்,கதிர்வீச்சு அபாய தடுப்பு உடைகள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு, தொழில்நுட்ப ஜவுளி பயன்படுத்தப்படுகிறது.
இத்துடன், கொசுவலை, ஒரு சில பயிர்களை பாதுகாப்பதற்கான போர்வைகள் போன்றவையும், தொழில்நுட்ப ஜவுளி பிரிவில் அடங்கியுள்ளன.இத்தகைய தொழில்நுட்ப ஜவுளி சந்தை, சிறப்பான வளர்ச்சி பெறும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது, உள்நாட்டு பயன்பாடு மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றை உள்ளடக்கிய, பாரம்பரிய ஜவுளிகள் மற்றும் ஆயத்த ஆடைகள் சந்தை மதிப்பு, 9,900 கோடி டாலர் என்ற அளவில் உள்ளது.இது, ஆண்டுக்கு சராசரியாக, 8.6 சதவீதம் வளர்ச்சி கண்டு, வரும் 2023ஆண்டில், 22,600 கோடி டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|