பதிவு செய்த நாள்
07 ஜூலை2014
09:51
மும்பை : 16வது லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்க உள்ளது. நாளை (ஜூலை 8) ரயில்வே பட்ஜெட்டும், ஜூலை 10ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. மோடி அரசின் பட்ஜெட், பங்குச் சந்தைகளுக்கு சாதகமாக அமையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால் இந்திய பங்குச் சந்தைகள் இன்று அதிரடி ஏற்றத்துடன் துவங்கி உள்ளன.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (ஜூலை 7 காலை 9 மணி நிலவரம்) முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு சென்செக்ஸ் 114.88 புள்ளிகள் உயர்ந்து 26,076.94 புள்ளிகளாகவும், நிப்டி 28.80 புள்ளிகள் அதிகரித்து 7780.40 புள்ளிகளாகவும் உள்ளது. சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்திருந்த போதிலும், பங்குச் சந்தைகள் ஏற்றத்துடனேயே துவங்கி உள்ளன. டாடா பவர், டாடா மோட்டார்ஸ், ஓ.என்.ஜி.சி., உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|