பதிவு செய்த நாள்
08 ஜூலை2014
00:39
நாமக்கல் :தமிழகம் மற்றும் கேரளாவில், முட்டை கொள்முதல் விலை, 360 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில், முட்டை கொள்முதல் விலையை, ஐந்து காசுகள் உயர்த்தி, 360 காசாக நிர்ணயம் செய்வது என, முடிவு செய்யப்பட்டது.நாட்டில், பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) நிலவரம்:சென்னை, 401, பெங்களூரு, 383, மைசூர், 388, ஐதராபாத், 355, மும்பை, 395, விஜயவாடா, 351, கோல்கட்டா, 385, பர்வாலா, 304, டில்லி, 325.நாமக்கல்லில், நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், முட்டைக் கோழி விலை, 57 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. பல்லடத்தில், நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், அதன் விலை, 73 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|