பதிவு செய்த நாள்
09 ஜூலை2014
00:13
புதுடில்லி:போதுமான மழையின்மையால், நடப்பாண்டு கரீப் பருவத்தில் (ஜூன் – செப்.,) இதுவரையிலுமாக, நெல் பயிரிடும் பரப்பு, 25 சதவீதம் குறைந்து, 45.12 லட்சம் ஹெக்டேராக சரிவடைந்துள்ளது.
இது, கடந்தாண்டின் இதே பருவத்தில், 60.28 லட்சம் ஹெக்டேராக இருந்தது.பருப்பு வகைகள் பயிரிடும் பரப்பும் (ஜூலை 4ம் தேதி நிலவரம்), 66 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 21.84 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 7.5 லட்சம் ஹெக்டேராக சரிவடைந்துள்ளது.
எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் பரப்பளவு, 77 சதவீதம் குறைந்து, 14.49 லட்சம் ஹெக்டேராகவும், முக்கிய உணவு தானியங்களின் பயிரிடும் பரப்பு, 58 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 27.93 லட்சம் ஹெக்டேராகவும் சரிவடைந்துள்ளது.கரும்பு பயிரிடும் பரப்பு, 45.20 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 43.92 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. பருத்தி பயிரிடும் பரப்பளவு, 55.77 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 35.42 லட்சம் ஹெக்டேராக வீழ்ச்சி கண்டுள்ளது.
தற்போதைய புள்ளிவிவரத்தின்படி, கரீப் பருவத்தில், வேளாண் சாகுபடி பரப்பு, 182.40 லட்சம் ஹெக்டேரை தாண்டியுள்ளது என, அரசின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது, இதற்கு முந்தைய பருவத்தில், 318.90 லட்சம் ஹெக்டேராக மிகவும் அதிகரித்து காணப்பட்டது.சென்ற 2013–14ம் பயிர் பருவத்தில் (ஜூலை – ஜூன்), பருவமழை நன்கு இருந்ததையடுத்து, நாட்டின் உணவு தானியங்கள் உற்பத்தி, 26.44 கோடி டன்னை எட்டி சாதனை படைத்தது. நாடு முழுவதிலும், சென்ற ஜூன் மாதத்தில் பெய்த மழையளவு, சராசரிக்கும் குறைவாக, 43 சதவீதம் என்ற அளவில் இருந்தது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|