பதிவு செய்த நாள்
14 ஜூலை2014
00:32
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 4ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 3,720 கோடி ரூபாய் (62 கோடி டாலர்) அதிகரித்து, 18.98 லட்சம் கோடி ரூபாயாக (31,640 கோடி டாலர்) வளர்ச்சி கண்டுள்ளது.இது, இதற்கு முந்தைய வாரத்தில், 5,160 கோடி ரூபாய் (86 கோடி டாலர்) உயர்ந்து, 18.95 லட்சம் கோடி ரூபாயாக (31,578 கோடி டாலர்) இருந்தது.கணக்கீட்டு வாரத்தில், அன்னியச் செலாவணி சொத்து மதிப்பு, 76 கோடி டாலர் அதிகரித்து, 28,957 கோடி டாலராக வளர்ச்சி கண்டுள்ளது.
அதேசமயம், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு, 15.55 கோடி டாலர் குறைந்து, 2,063 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.மதிப்பீட்டு வாரத்தில், எஸ்.டீ.ஆர்., மதிப்பு, 69 லட்சம் டாலர் உயர்ந்து, 446 கோடி டாலராகவும், சர்வதேச நிதியத்தில் நம்நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு, 26 லட்சம் டாலர் அதிகரித்து, 172 கோடி டாலராகவும் உள்ளன என, என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|