பதிவு செய்த நாள்
14 ஜூலை2014
00:43
புதுடில்லி:நடப்பு 2014–15ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், முன்பேர சந்தைகளின் வர்த்தகம், 64.90 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 14.55 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்து உள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 41.45 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
மதிப்பீட்டு காலாண்டில், வேளாண் விளை பொருட்கள் மீதான முன்பேர வர்த்தகம், 18.23 சதவீதம் குறைந்து, 3.67 லட்சம் கோடியிலிருந்து, 3 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் மீதான வர்த்தகம், அதிகபட்சமாக, 73.02 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 19.38 லட்சம் கோடியிலிருந்து, 5.23 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.இதர உலோகங்கள் மீதான முன்பேர வர்த்தகம், 60.56 சதவீதம் சரிவடைந்து, 7.93 லட்சம் கோடியிலிருந்து, 3.12 லட்சம் கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
கணக்கீட்டு காலாண்டில், எரிசக்தி மீதான வர்த்தகம், 69.53 சதவீதம் சரிவடைந்து, 10.45 லட்சம் கோடியிலிருந்து, 3.18 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது என, பார்வர்டு மார்க்கெட்ஸ் கமிஷன் (எப்.எம்.சி.,) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|